- நோய்த்தடுப்பு
நானாட்டான் பிரதேச சபையானது நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும், தனியார் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பரவுவதற்குள்ள வாய்ப்புகள் பற்றி அடிக்கடி பரிசீலனை செய்வதற்கும், நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றி மக்களை அறிவுறுத்தி வந்துள்ளது. மேலும் நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கான கிருமிநாசினிகளை தெளிப்பது , சிறந்த சுகாதாரப்பழக்கவழக்கங்கள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி இருத்தல் என்பன உள்ளுராட்சி வாரத்தின் மூலம் விசேடமாக செய்து வருகின்றது.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் அகற்ற வேண்டிய குப்பையின் அளவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மலசல கூட கழிவகற்றுவதும் அதிகரித்து காணப்பட்டது. எனினும் பிரதேச சபையின் சபை வாகன, ஆளணி மூலம் வினை திறனுடன் செயற்றப்பட்டு கழிவகற்றல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது.