
மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் - முருங்கன் - 2024.08.22
நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு முருங்கன் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை ( முருங்கன் வட்டாரம் ,கற்கிடந்தகுளம் வட்டாரம், மளுவராயன் கட்டையடம்பன் வட்டாரம்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.08.22 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் உப அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நானாட்டான் பிரதேச சபையின் அலுவலர்கள், சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.


