2024 ஆம் ஆண்டு பாதீட்டில் மாற்றுத் திறனாளிகளிற்கு உதவுவதற்கென ஒதுக்கப்பட்ட தொகையில், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பகுதியில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தினரினால் நடாத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பயிலும் நிலையத்திற்கு அவர்களது பயன்பாட்டிற்கு ஏதுவான உதவிப் பொருட்கள் 2024.10.29 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.