

2024.01.01 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் திரு. சேவியர் லெம்பேட் ரெனால்ட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2023 இற்கு அமைவாக முதலில் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார், அதனைத்தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் அரச சேவை உறுதியுரையேற்று சத்தியப் பிரமாணம் செய்தனர்.
தற்போதைய சவால்ககள வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அவற்றை அடைவதற்குரிய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்க உரை ஆற்றப்பட்டது
நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்குரிய கடமை செயற்பாடுகள் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது