இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளவில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான நடத்தப்பட்ட போட்டியில் 2022 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டு 04.12.2023 அன்று பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” நிகழ்வில்மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே சான்றிதழ் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது