

இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளவில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான நடத்தப்பட்ட போட்டியில் 2022 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டு 04.12.2023 அன்று பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023" நிகழ்வில்மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே சான்றிதழ் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது


நானாட்டான் பிரதேச சபையின் திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்ம கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் LDSP திட்டத்தின் PT2 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட Garbage Collecting Colour Bins எமது ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி மாணவர்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி மேம்படுத்தும் செயற்திட்டம் வங்காலையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்சியாக மன்/டிலாசால் கல்லூரி, நானாட்டான், மன்/சிவராஜா இந்து வித்தியாலயம் - நானாட்டான், மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.


நானாட்டான் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சூழலை பசுமையாக்குவோம் செயற்திட்டத்தின் கீழ் பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சேகரித்து துப்பரவு செய்யும் பணியானது வங்காலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.


நானாட்டான் பிரதேச சபையின் ஏற்பாட்டில் முருங்கன் உப அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் உணவக உரிமையாளர்களுடன் இடம் பெற்ற கூட்டத்தில் உணவு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது.