


நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக எமது சபை எல்லைக்குட்பட்ட பாதிக்கபட்ட மக்கள் எம்முடன் தொடர்பு மேற்கொள்வதன் மூலம் எம்மால் தங்களிற்கு துரித சேவைகள் வழங்க முடியும்..
பயணங்களிற்கு இடையூறாக வீதியில் விழும் மரங்கள்
வெள்ளம் தடைப்படும் இடங்கள்
போன்ற இடர்களை எமக்கு உடன் அறியத்தாருங்கள் நாம் உங்களுடன் உடன் இணைவோம்.
கீழ் உள்ள புகைப்பட பதிவில் தொடர்பு இலக்கங்கள் குறிப்பிட பட்டுள்ளது.
திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்தல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளினை திருமதி.J.M.Antarida. பொறுப்பதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அவர்களினால் நானாட்டான் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 22.10.2024ம் திகதி அன்று நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.